Posts

காரைக்குடி பொன் நகர் பகுதிக்கு சாலை வசதி தேவை!

Image
காரைக்குடி அருகே பொன் நகர் ( இலுப்பக்குடி ) பகுதி வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு சரியான சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொன் நகர் சாலை கிழக்கு - மேற்கு பகுதி தெருக்கள் பல தார் சாலை போடப்படாமல் கார்கள், லாரிகள், பள்ளி பேருந்துகள் வந்து செல்வதால் மண் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே உள்ளாட்சி நிர்வாகம் உரிய சாலை வசதிகள் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரி வருகிறார்கள்.

முதியவரை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை!

தேவகோட்டை: கண்ணங்குடி அருகே வளையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா ( வயது 68 ) என்ற விவசாயியை அர்ஜுனன் ( 45 ) என்பவர் 2015 ஆம் ஆண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மணல் கடத்தல் புகார் கூறியதாக தவறான சந்தேக அடிப்படையில் இவ்வாறு நடந்தாக தெரியவந்தது. சுப்பையா கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் வயதான முதியவரை தாக்கிய அர்ஜுனனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை தேவகோட்டை நீதிமன்றம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
 காரைக்குடியில் செக்காலை சாலையிலிருந்து தேவகோட்டை ரஸ்தா வரையுள்ள சாலை குதறப்பட்டு கிடப்பது அதிகாரிகள் கண்ணில் படவில்லையா ? இது மிக மோசமான நிர்வாகத்தையே காட்டுகிறது.   கல்வியை சர்வதேச தரத்துக்கு மாற்றப்போவதாக கூறும் அமைச்சர்கள்,  முதலில் நகர - கிராம சாலைகளை தரமானதாக மாற்றுங்கள் ! இந்தப் பகுதிக்கு அடிக்கடி வரும் அமைச்சர் பெரியகருப்பன் இதனைக் கவனிப்பாரா ?
முஸ்லிம்கள் தியாகத் திருநாள் தமிழகத்தில் நாளை கொண்டாடப்படுகிறது! காரைக்குடி அந்தந்த மஹல்லா பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை காலை 8 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தானியங்கி மூலம் விண்வெளிப் பயணம் ! 106 கி.மீ.விண்வெளியில் பயணம் செய்து செப் ஜோசப் உட்பட 3 பேர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்கள்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2ம் நாளாக கனமழை பெய்துள்ளது! நுங்கம்பாக்கம், வடபழனி, பாடி முதலான இடங்களில் மழை வெள்ளத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேவகோட்டை செய்தி எனும் பெயரில் இணையம் ஆரம்பித்துள்ளேன். இணையம் வழியாக செய்திகள், மீரா டிவி எனும் பெயரில் காணொலி மூலம் தமிழ் மக்களுக்கு இசை, பயனுள்ள உரைகள் வழங்க ஆசை ! நேயர்களாகிய உங்கள் அன்பும் ஆதரவும் தேவை ! - ஜே.எம்.